Thursday, September 25, 2014

31ஆம் நாள் நினைவஞ்சலி - அமரர் குமார் வெள்ளக்குட்டி

31ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிரிகையும்

அமரர் குமார் வெள்ளக்குட்டி 
மண்மகிழ - 25.05.1925
கண்நெகிழ  - 26.08.2014

26.08.2014 செவ்வாய் அன்று இறைபதம் அடைந்த எங்கள் அன்புத்தெய்வத்தின் 31ம் நாள் நினைவு நிகழ்வானது 26.09.2014 வெள்ளியன்று எமது இல்லத்தில் இடம்பெறவுள்ளது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அத்துடன் அன்னாரின் மரணச் செய்தி கேட்டு வருகை தந்து உடனிருந்து ஆறுதல் அளித்ததுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள்,மலரஞ்சலி செலுத்தியவர்கள், தொலைபேசி மூலம் ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்தவர்கள், பிரசுரங்கள் பதாதைகள் வெளியிட்டவர்கள் மற்றும் அனைத்து காரியங்களிலும் அல்லும் பகலும் அயராது உழைத்த உறவுகள் உற்றார் உறவினர்கள் பாசமிகு நண்பர்கள் எல்லோருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 

'திருவரங்கம் '                                                                                தகவல் 
செட்டிபாளையம் வடக்கு                                                     குடும்பத்தினர் 
செட்டிபாளையம் 
0652250319

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka