கடந்த 06.10.2021 ( புதன் கிழமை ) அன்று இறையடி சேர்ந்த அமரர். சிவபாக்கியம் ஜோக்கிம் அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திக் கிரியை எதிர்வரும் 06.11.2021 ( சனிக்கிழமை ) அன்று எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அன்பின் திருவுருவே ஆருயிரே
துன்பத்தில் எமை ஆழ்த்தி நெடுந்தூரம் சென்றதென்ன
பிரிவுகள் நிஜமானவை என்று தெரிந்தும்
ஏற்க மறுக்கிறது எங்கள் மனம்
சத்தியமாய் என்றும் உமை மறவோம்
சாந்தி கொள்ளுங்கள்
-இவ்வண்ணம் -
குடும்பத்தினர்