3வது நினைவஞ்சலி
அமரர் சிவலிங்கம் யோகராசா |
அருள்நேசபுரம் , கடுக்காமுனை
மூன்றாhண்டு காலம் முடிந்ததென்று சொல்கிறார்கள்
முந்த நாள் தான் வந்து நீங்கள் சென்றது போல் உள்ளதையா
ஆண்டு பல நூறு இங்கே அவனியிலே சென்றாலும்
ஆறிடுமா ஆருயிரே அவதியுறும் எங்கள் நெஞ்சு
சிட்டுக் குருவிரெண்டை சிறகடிக்கும் அன்னையோடு
வட்டமிட்டு சைக்கிளேற்றி வலம் வந்து மகிழ்ந்த நிலா
பட்டென்று எளியிழந்து பரதவிக்க விட்டுவிட்டு
திட்டமொன்று சொல்லாமல் திசைமாறி போனதேனோ
அப்பா அப்பா என்று அழும் குரல்கள் கேட்கல்லையோ
அன்பு மக்கள் எங்களையும் அணைக்க மனம் விரும்பல்லையோ
தப்பேதும் செய்திருந்தால் தந்தையே மன்னியுங்கள்
தவிக்கின்றோம் உன்னைத்தேடி தயவு செய்து வந்திடுங்கள்
தகவல்
யோ.ஜெயசுதா(மனைவி)
யோ.அருண்காந், யோ.டெவின்காந் (பிள்ளைகள்)