Obituary - Battinews.com
Monday, September 11, 2023
Thursday, September 7, 2023
12வது நினைவஞ்சலி : அமரர் திரு. தவசிப்பிள்ளை இராசையா
அமரர் தவசிப்பிள்ளை இராசையா
(ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்,அகில ,லங்கை சமாதான நீதிவான்,இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்)
நீங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பொன்னுடல் நீத்து புகழுடம்பேந்தி பன்னிரெண்டு ஆண்டுகள் உருண்டாலும் நேற்றுப் போல் இருக்குது தெய்வமே,உம் உடலை மண்ணுக்குள் புதைந்து விட்டோம்.கண்ணுக்குள் ,நிழலாகும் உம் காட்சி எம் நெஞ்சில் நிலையாக நிழல் கொடுக்குப்பா.நீங்கள் எம் குலவிளக்கு எம்மை வழிகாட்டி எம்முடன் வாழ்கின்றீர் தெய்வமெ! உங்கள் ஆத்மா சாந்திக்காக என்றுமே பிரார்த்திக்கின்றோம். தெய்வமெ!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் உம் நினைவுடன் வாழும்
மனைவி,மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,உடன் பிறப்புக்கள் மற்றும் உறவினர்கள்.
பிரதான வீதி,பட்டிருப்பு,களுவாஞ்சிக்குடி
தொலைபேசி :-0778163664
Tuesday, August 22, 2023
அமரர் ஜோசப் நவரெட்ணம் : இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அகலுமா நெஞ்சை விட்டு உங்கள் நினைவுகள் அப்புச்சி .
நாம் செய்த தவங்கள் பயனற்று போனதேனோ .
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே கூடியிருந்த எம்மை எல்லாம் கைவிட்டு சென்றதேனோ அப்புச்சி எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு விட்டு நிம்மதியாக இறைபாதம் சென்றது ஏனோ அப்புச்சி
அன்பினால் பண்பினால் எங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் அப்புச்சி வருடங்கள் மாதங்கள் , நாட்கள் செல்ல செல்ல உங்களுடன் கழித்த நாளிது , உங்கள் அருகில் அமர்ந்த நிமிடம் இது என நினைத்து நினைத்து வாடுகின்றோம் .
எங்கள் அன்பு அப்புச்சிக்கு எமது கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி என்றென்றும் உங்கள் நினைவுகளுடன் பரிதவிக்கும்
மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள்
தகவல் - குடும்பத்தினர்
Wednesday, August 16, 2023
Sunday, August 13, 2023
Tuesday, July 11, 2023
அமரர் கதிராமத்தம்பி நவரெத்தினராசா : 31ம் நாள் நினைவஞ்சலி
அம்பிளாந்துறையை பிறப்பிடமாகவும், அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து கடந்த 12.06.2023 திங்கட்க்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தெய்வத்தின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உள் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையமூடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலை, துண்டுப்பிரசுரம், பதாதைகள் ஊடாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், நேரில் கலந்து கொண்டு அனைத்து வழிகளிலும் உதவி நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குன்றோம்.
அன்னாரின் சிவப்பதபேறு குறித்த 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 12.07.2023 புதன்கிழமை அன்று அரசடித்தீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இங்கனம்: குடும்பத்தினர்
சனசமூக நிலைய வீதி
அரசடித்தீவு
கொக்கட்டிசோலை.
Labels:
31ம் நாள் நினைவஞ்சலி
Saturday, July 8, 2023
அமரர் சீனித்தம்பி கிருபைராஜா : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
"ஆண்டொன்று போனதையா - உன் அன்பு முகம் மறைந்து
பிரிவென்னும் படகில் தனித்து நான் பயணமதை தொடர்கையிலே
தெரிகிறது உன் நேசமுடன் பாசமது தேயாமல் தேய்கின்றேன் உன் நினைவால்
நீரில்லா பயிர் போன்று நான் நிற்கின்றேன் தனிமரமாய்
உறவுகள் ஆயிரம் தான் இருந்தாலும்
உன் இடத்தை நிரப்ப யார் வருவார் "
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்
அன்பு மனைவி
புனிதமலர் கிருபைராஜா
இலட்சுமி வாசம்
ஆரையம்பதி 01
Thursday, July 6, 2023
அமரர்.சாமித்தம்பி அருளம்பலம் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
திதி 11.07.2023
அமரர்.சாமித்தம்பி அருளம்பலம்
(ARUL CARPENTER WORKS AND TIMBER DEPOT )
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காக திகழ்ந்த உங்களைப் பிரிந்து ஓராண்டு கடந்தாலும் எம்மைவிட்டு அகலாது உங்கள் நினைவு.
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன் ,
குடும்பத்தினர்
Labels:
நினைவஞ்சலி
Friday, June 16, 2023
அமரர் சாமித்தம்பி பஞ்சலிங்கம் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அன்பின் திருவுருவே அடக்கத்தின் பெட்டகமே,
பண்பின் நாயகனே பல்கலையில் வல்லவனே,
துன்பம் கண்டு துவளாத தூயவனே,
அன்பால் அறிவால் எம்மை காத்து,
நாம் பொன்போல் ஒளிர, துணை நின்ற எம் தந்தையே,
காலன் உன்னை கொண்டு சென்று ஓராண்டு ஆனாலும் இன்றும் அருகில் இருந்து கதைப்பது போன்ற உணர்வுடன்,
என்றும் உம் நினைவில் வாழும்
குடும்பத்தினர்
Saturday, June 3, 2023
Sunday, May 28, 2023
அமரர் நாகலிங்கம் மகாலிங்கம் : இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
ஈராண்டு ஆனதென்று நாட்கள் சொல்கிறது
ஈரம் மாறா இமைகளோடு இதயம் கனக்கிறது
போராடும் எம் வாழ்வில் நாம் போகும் பாதை
நிச்சயம் நீங்கள் காட்டியதே
உங்கள் ஆத்மா சாந்திக்காய் இறைவனை பிரார்த்திக்கும் நாம்
என்றும் தங்கள் நினைவுகளுடன் வாழும்
அன்பு மனைவி , மகள் , மகன் , குடும்ப உறவினர்கள்
இல 184 , விபுலானந்த வீதி , வாழைச்சேனை
0652257253
Tuesday, May 2, 2023
அமரர் வேலாயுதம் கணபதிப்பிள்ளை 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்!
அன்பு பாசம் பண்பு பக்தி. பரிவு ஒழுக்கம் பணிவு என்பவற்றில்
அனைத்து சமய சமூக பொது அமைப்புக்களும் உறவுகளும்;
அவதானித்து சுதந்திரமாக பதிந்த புள்ளிகள் நூற்றுக்கு நூறு!
அகவை 101ஐ ஆரோக்கியமாகவே கடந்ததற்கு வைத்தியர்களும்
அதே நிலைப்பாட்டை வெளியிட்டது வெட்ட வெளிச்சம்!
அணையா விளக்காக இருந்து மெழுகுவர்த்தியாய் மாறி
அனைத்தையும் அப்பழுக்கின்றி செய்து எங்களை ஆட்கொண்ட
அன்புக்கு இலக்கணம் தந்த அருமையான உறவின் உச்சமே!
அழுதும் தீராத துயரும்;; தாக்கமும் எமக்கும் நூற்றுக்கு நூறு!
ஒழுக்க சீலராகவே வாழ்ந்ததால் 101வது வயதை பூர்த்தி செய்து
03.04.23ல் அமரத்துவமடைந்த எங்கள் குடும்ப ஒளி விளக்கு வே.கணபதிப்பிள்ளை அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி 04.05.2023 வியாழக்கிழமை நண்பகல் அன்று பெரியகல்லாறு -01 எல்லை வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெறும் 31ம் நாள் கிரியைகளில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்த்திக்குமாறும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் வினயமாக வேண்டிக் கொள்ளுகின்றோம்!.
அன்னாரின் இறுதிக்காலத்திலும். இறுதிச் சடங்கு வரையிலும்
எம்மோடிருந்து ஆறுதல் வழங்கி அனைத்து வகையிலும் சிரமங்கள் தாங்கி சிரத்தையுடன் எமக்கு பொருத்தமான சிறப்பான பங்களிப்புச் செய்து எங்களை தேற்றிய உங்களை இத் தருணத்தில் மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவு கூருகின்றோம் ஆயிரமாயிரம் நன்றிகள்!
உபயங்கள் அன்பளிப்புக்கள் என்பவற்றை முழுமையாக தயவுசெய்து தவிர்த்து உளப்பூர்வமாக அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்திற்கான கிரியைகளில் பங்கேற்றுஆத்மசாந்திக்கு மனப்பூர்வமாக பிரார்த்திப்பதே உங்களின் மேலான சிறந்த ஒத்துழைப்பாக எமக்கு அமையும்.
மேலான நன்றியுணர்வுடன்
குடும்பத்தினர்
067 2221452
Subscribe to:
Posts (Atom)
Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka