Obituary - Battinews.com
Saturday, August 13, 2022
Wednesday, August 10, 2022
Tuesday, August 2, 2022
Wednesday, July 27, 2022
Wednesday, July 20, 2022
31ம் நாள் நினைவஞ்சலி : அமரர். சாமித்தம்பி அருளம்பலம் (அருள்)
கடந்த 22.06.2022 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்த துறைநீலாவணை 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாவும் கொண்டிருந்த சாமித்தம்பி அருளம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 22.07.2022 அன்று துறைநீலாவணையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதனை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.
அன்னார் இறைபதமடைந்த செய்தி கேட்டு உடன் வந்து துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் தொலைபேசி வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும் மேலும் பல வழிகளிலும் உதவி புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .
தகவல்-
சா.தேவசகாயம்
சா.இராஜேந்திரன்
சா.மகாலிங்கம்
த.பவானிதேவி
Saturday, July 16, 2022
மரண அறிவித்தல் : திருமதி தனலெட்சுமி பிரசாத்
மட்டக்களப்பு நொச்சிமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி . தனலெட்சுமி பிரசாத் அவர்கள் 16-07-2022 ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ் சென்ற மயில்வாகனம் பிரசாத் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ் சென்ற டாக்டர் தம்பிராஜா நாகரெத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ் சென்ற முகாந்திரம் உடையார் மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ் சென்றவர்களான இராஜேந்திரம், கருணைலெட்சுமி , அச்சுதானந்தன், அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் நிருக்ஷா (லண்டன்) , நிறோசினி (ஆசிரியை - மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பாலமுரளி (லண்டன்) ஹரிகரராஜ் (பிரதி கல்விப்பணிப்பாளர் - மட்டக்களப்பு கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும் கீர்த்திக், லக்ஷனா, ஹரிணி, கார்த்திகேயன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்
கலாநிதி பிரேம்குமார் (சிரேஷ்ட விரிவுரையாளர் - கிழக்கு பல்கலைக்கழகம்)
காலஞ் சென்ற கிருஷ்ணகுமார், உருத்திரகுமார்(ஸ்கொட்லாந்து) , சந்திரகுமார்(UK) , ஆகியோரின் சின்னம்மாவும் மிருணாளினி , றுகாளினி ஆகியோரின் மாமியாரும்
அபர்ணா (ஆசிரியை - நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயம்)
தெய்வேந்திரகுமாரி (ஓய்வு பெற்ற ஆசிரியை) ,
ஸ்ரீ ரஜனி (ஸ்கொட்லாந்து) அகிலா(UK) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிச் சடங்கு 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று கல்லடி - உப்போடை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.
Monday, June 6, 2022
Saturday, June 4, 2022
Wednesday, June 1, 2022
அமரர் நல்லதம்பி பாலசுந்தரம் : ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி
Friday, May 27, 2022
அமரர் நாகலிங்கம் மகாலிங்கம் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
Saturday, May 21, 2022
மரண அறிவித்தல் : அமரர் திருமதி . செல்வராணி நடேசன்
காரைதீவினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி நடேசன் இன்று 21.05.2022 காலமானார்
அன்னார் நடேசன் ( ஒய்வு பெற்ற உத்தியோகஸ்தர் - நெல் சந்தைப்படுத்தல் சபை) அவர்களின் மனைவியும் கந்தையா கனகவல்லி ஆகியோரின் பாசமிகு மகளும் ,பரசுராமபிள்ளை கற்பகம் ஆகியோரின் மருமகளும்
லாவண்யா , பகிரதன் (சத்திரசிகிர்ச்சை நிபுணர் ) , அகிலன் (சத்திரசிகிர்ச்சை நிபுணர்), புவிந்தன் (பொறியியலாளர்) , நிவேர்த்திகா (மிருக வைத்திய நிபுணர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
உமாசங்கர் ( பல் வைத்திய நிபுணர்) , துஷிதா (பல் வைத்திய நிபுணர்) ,சஹானுஜா (வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
தேஜஸ்வினியின் அம்மம்மாவும் , நவ்யனாவின் அப்பம்மாவுமாவார்.
நாளை 22.05.2022 (ஞாயிறு) மாலை 3.00 மணியளவில் காரைதீவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் யாவும் இடம்பெற்று காரைதீவு இந்து மயானத்தில் தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.
தகவல் - குடும்பத்தினர்
Dr.அகிலன் - 0777999855 (மகன் )
Monday, May 2, 2022
Wednesday, April 20, 2022
அமரர் திருமதி மகேஸ்வரி கனகரெத்தினம் 31ம் நாள் நினைவஞ்சலி
கடந்த 23/03/2022 புதன்கிழமையன்று இறைபதமடைந்த திருமதி மகேஸ்வரி கனகரெத்தினம் அவர்களின் இறைபதமடைந்த செய்தி கேட்டு உடன் வந்து துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் தொலைபேசி மற்றும் முகநூல் வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும் மேலும் பல வழிகளிலும் உதவி புரிந்த உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .
தகவல்
குடும்பத்தினர்
Obituary - Battinews.com Copyright © 2011 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka