Monday, August 19, 2019

ஈராண்டு நினைவஞ்சலி : ஆறுமுகம் அழகேந்திரன்

  ஆறுமுகம் அழகேந்திரன் ( கோட்டைக்கல்லாறு ) 
(ஓய்வு பெற்ற  கிராம சேவகர் , பிரசித்த நொத்தாரிஸ்)
மலர்வு : 29.05.1946       உதிர்வு : 24.08.2017

ஆண்டுகள் இரண்டு ஓடியதே , ஆழமது நிரம்பவில்லை
இதயமது இரும்பாக , இல்லமது    வெறுப்பாக
ஈன்றெடுத்த மக்களிற்கும் ஈரமது காய்ந்து போக
உலகை விட்டுப் பிரிந்ததேனோ , உவகை அதைப் பறித்த தேனோ
உன் உடம்பு போனாலும் ஊட்டிய கைகள் பிரிந்தாலும்
எண்ணங்கள் மறைந்தாலும் எழுதிய எழுத்துக்கள் மறைந்தாலும்
ஏடு தொடக்கித்தந்த ஆசானே ஏணிபோல் இருந்தாயே
ஒத்தையாயிருந்து மனைவியுடன் குடும்பத்தில்
ஒற்றுமையை ஓங்கச் செய்தாய்
ஓடத்தின் துடுப்புப் போல் ஓவியத்தின் வர்ணம் போல்
ஔவியமது பேசாமல்  ஔடதம் போல் இருந்தாயே
நீங்காத உன் நினைவுகளுடன் கண்ணீரில் கரைகின்றோமே .

தகவல் , 
மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் ,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
(கோட்டைக்கல்லாறு )


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka