கல்லடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் சோமசுந்தரம் சிவலிங்கம் (ஓய்வுபெற்ற விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர்) அவர்கள் 2022.03.29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், செல்வரட்ணம் அவர்களின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை, ஸ்ரீரங்கம் அவர்களின் மருமகனும்
திருமதி அன்னலெட்சுமியின் பாசமிகு கணவரும் , சோமஸ்கந்தன் அவர்களின் அன்புத் தந்தையும் , தனுஷா அவர்களின் பாசமிகு மாமனாரும்
டக்ஷேஷ் மற்றும் தாரகேஷ் ஆகியோரின் அப்பப்பாவும்
திருமதி தவமணி அச்சுதானந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்
காலஞ்சென்றவர்களான திருமதி தவமணி தியாகராஜா, சங்காரவேல், கணேசலிங்கம், காராளசிங்கம், அச்சுதானந்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும்
சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுதமதி, சுஜீவ், சாந்தகுமார், கணேஷ், வாசுகி, சஞ்ஜித், வாஜிதா, அஜந்தன், றுஹாணி, ரவிசங்கர், ரகுசங்கர் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 186, பதிய கல்முனை வீதி, கல்லடி மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 2022-03-31 வியாழக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கல்லடி உப்போடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
0652222861