தேற்றாத்தீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி இரத்தினம் தில்லைநாயகம் அவர்கள், 04.02.2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - பார்ப்பதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓய்வு பெற்ற அதிபர் தில்லைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.சத்தியசீலன் (U.S .A ) , சாந்தசீலன் (Engineer, Australia), Dr.சிவசீலன் (Australia) , வசந்தகுமாரி (Medical Laboratory Tech Officer, Australia) காலஞ்சென்ற ஜெயகுமாரி மற்றும் ராஜகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் , கனகரெத்தினம் (Engineer, Australia), ஜானகி (Scientist, USA), தேவினா (Scientific Officer, Australia), மாலதி (Teacher, Australia) Dr. சிறிபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணி ,வைரமுத்து ,மாரிமுத்து , செல்லம்மா , பரமேஸ்வரி, கனகசூரியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான கனகம்மா, மாசிலாமணி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,
Dr.சிந்துஜா (Professor, USA), வருண் (Computer Engineer, USA), Dr.துஷ்யந்தி (Gyn & Obs Advanced Trainee, Australia), Dr. ஹர்ஷன் (Endocrinology Advanced Trainee, Australia), அஸ்விதா(Engineer, Australia), அபிநயா (Medical Student, Australia), மேசேக் (Student, Univ. of NSW, Australia) ஆகியோரின் பாட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு 56/2 கோவிந்தன் வீதியிலுள்ள இல்லத்தில் 05.02.2024ம் திகதி திங்கட்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு 06.02.2024ம் திகதி செவ்வாய்க்கிழமை ஈமக்கிரியைகள் நடைபெற்று அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி மிகுந்த மனவேதனையுடன் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொ.பே.இ - +94 77 978 8442