மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் உயர்திரு பொன் செல்வராசா அவர்களின் ஈராண்டு நினைவு வணக்கம்..!
விடைபெற்றார் எங்கள் தலைவர் செல்வராசா !
விதிவந்து அழைத்ததால் அமரர் ஆனார் !
கதிகலங்கி நாங்கள் அழுதோமே அப்பா !
கைகூப்பி கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம் !
ஈராண்டு ஆனாலும் எம் நெஞ்சம் மறக்காது !
இருள்போக்கி ஒளிதந்த எம் குலத்தெய்வம் !
சொல்லாமல் கொள்ளாமல்
விண்ணகம் சென்றுவிட்டாயே...
எழுபத்தேழு ஆண்டுகளாய் இம்மண்ணில் வாழ்ந்து..
எங்களை பாரினில் உயர்த்தி பயணித்தாயே...
இடைநடுவில் இறைவன் ஏன் எடுத்தாரோ.
ஆயிரம் கரங்கள் உறுதுணையாக இருந்தபோதும்
உங்கள் கரங்கள்தானே நம்பிக்கை எமக்கு தந்தது !
இறைபதம் அடைந்தீரே இனி எங்கு காண்போம் !
ஈராண்டு நினைவில் ஏங்கித்தவிக்கும் .
அன்பு மனைவி,
ஆசைப்பிள்ளைகள்.மருமக்கள், பேரக்குழந்தைகள்.
புகையிரதநிலைய வீதி மட்டக்களப்பு.
0 comments:
Post a Comment