' ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ '
31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிரியையும் நன்றி நவிலலும்
ஓந்தாச்சிமடம் தெய்வத்திரு சீனித்தம்பி பரசுராமன் JP
( ஓந்தாச்சிமடம் முன்னாள் கிராமசபை , கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவரும், ம.தெ.எ.பற்று கிராமோதய சபை உறுப்பினரும் மற்றும் பலநோக்கக் கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளரும்)
கடந்த 26.08.2014 செவ்வாய்க்கிழமையன்று இறைபதமடைந்த அன்னார் அமரர்களான சீனித்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் புதல்வனும் மற்றும் திருமஞ்சணம் அவர்களின் பாசமிகு கணவரும், அமரர்களான இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனகேசரி, ஆனந்தராசா, சபாரெட்ணம், நமசிவாயம், துரைசிங்கம் (சுவிஸ்), கேசலட்சுமி, ரதி, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
நடராசா, கோபாலபிள்ளை, பிரபாகர் (நீர்ப்பாசனத் திணைக்களம்), சோதிமணி, காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் அரியமலர், கோமதி, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
எமது குடும்பத் தலைவரின் ஆத்ம சாந்தி வேண்டிய 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 25.09.2014 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் இல: 58ஃ8 , புனித செபஸ்தியார் வீதிஇ மட்டக்களப்பு இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன உபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அத்துடன் அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு உடன் இல்லம் வந்து அன்று முதல் இன்று வரை எம்முடன் துயரத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உபசரிப்புகள் வழங்கி உதவி புரிந்தோருக்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தோருக்கும், மாலைகள் அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பதாதைகள், அனுதாப துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும், இரங்கலுரை நிகழ்த்தியவர்களுக்கும் மற்றும் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கத்தில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
இல: 58/8இ புனித செபஸ்தியார் வீதி,
மட்டக்களப்பு
0652223379
இவ்வண்ணம்
குடும்பத்தினர்