Monday, January 26, 2015

மரண அறிவித்தல் - அமரர் சிவசுப்பிரமணியம் சரவணபவான்


திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட   சிவசுப்பிரமணியம் சரவணபவான்
அவர்கள் 26.01.2015 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சௌந்தரலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், வித்யாயினி (இலங்கை வங்கி – செங்கலடி) அவர்களின் அன்புத் தந்தையும், ராஜேந்திரபிரசாத் (கொமர்ஷல் வங்கி – மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மாமனாரும், நித்திஷின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 29.01.2015 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக மட்ஃகள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இல.45, புகையிரத குறுக்கு வீதி, தகவல்
மட்டக்களப்பு . குடும்பத்தினர்.
065-2225574.
   

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka