Friday, January 30, 2015

மரண அறிவித்தல், - அமரர் கணபதிபிள்ளை கயிலாயபிள்ளை

அமரர் கணபதிபிள்ளை கயிலாயபிள்ளை (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்கள் இயற்கையெய்தினார்.

களுதாவளையினை பிறப்பிடமாகவும் இல: 27எ, வெயிலி 2ஆம் குறுக்கு வீதி, மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கணபதிபிள்ளை கயிலாயபிள்ளை (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்கள் கடந்த 28.01.2015ஆம் திகதி  இயற்கையெய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர்மல்க 29.01.2015ஆம் திகதி கள்ளியங்காடு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதிக்கிரிகைகளில் அரச அதிகாரிகள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அன்னாரது குடும்பத்தினருக்கு தமது இரங்கல்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் 8ஆம் நாள் நினைவஞ்சலி எதிர்வரும் 05.02.2015ஆம் திகதியும், 31ஆம் நாள் நினைவஞ்சலி எதிர்வரும் 27.02.2015ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
தகவல்: திரு.சி.சிறிதரன்,
               (T.P: 0773739141)
               பிரதிக்கல்விப் பணிப்பாளர்,
               மட்டக்களப்பு மேற்கு,
               குறிஞ்சாமுனை. 


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka