Tuesday, June 30, 2015

41ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | அமரர் சச்சிதானந்தம் - மதிதயன்


மண்டூரைச் சேர்ந்த, சச்சிதானந்தம் - மதிதயன் ஆகிய எனது கணவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அகால மரணமெய்திய செய்தி கேட்டு, அன்னாரின் ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டு பல வழிகளிலும் உதவியுள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடியாகவும், தொலைபேசியிலும் ஆறுதல் தெரிவித்தோருக்கும் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள், பதாதைகள் வெளியிட்டோருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருப்பதால், அதில் கலந்து கொண்டு பிரார்த்திக்குமாறும், அதனைத்தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
-தகவல்-
திருமதி தனுஜா-மதிதயன்(மனைவி)
1ம் பிரிவு, மண்டூர்.

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka