கருப்பூர் விருப்பூர்
03.11.1940 18.01.2015
திருமதி.பரமேஸ்வரி மயில்வாகனம்
(ஆசிரியர் திலகம்)
வேணி இல்லம் - குருக்கள் மடம்
|
ஆண்டுத் திதி : 18.01.2016 திங்கள்
சோலையில் பூத்தமலர்
சொற்பதோர் நேரத்தில்
மாலையில் மண்ணில் மடிவதுண்டு
காலையில் தோன்றியதோர்
ஆதவனார் தோற்றமும் தான் மங்கும்
ஆன்மாக்கள் அப்படியேயாகும்
அம்மா அம்மா எம் அம்மா
ஆண்டொன்று ஓடியதோ
அன்பான முகம் பார்த்து
அன்பான குரல் கேட்டு
ஆனதுவோ வருடமொன்று
நம்பத்தான் முடியவில்லை
அன்பான பிள்ளைகளால்
மற்றோர் மறந்தாலும்
மக்கள் நாம் மறப்போமா
தாய்மைக்கு வரைவிலக்கணம் தந்த
காவியத் தலைவியே !
எங்களை கண் கலங்காமல்
கதிகலங்காமல் கவலை இல்லாமல்
சிந்தை மகிழ சிரிக்கவைத்து
சிறப்புற வாழவைத்த தாயே !
உங்களை இனி எங்கு காண்போம்
எவ்வடிவில் காண்போம்
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள் நினைவில்
கணவர், மக்கள், மருக்கள், பேரப் பிள்ளைகள், பெறாப் பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள்
தகவல் : ம.பக்திநாதன் (மகன்)