Friday, April 29, 2016

சின்னத்தம்பி குணராஜாவிற்கு அடிமனது அஞ்சலி


மலர்வு :05.05.1945
உதிர்வு :23.04.2016
(நல்லடக்கம் 28.04.2016)

அன்பு, ஆதரவு, அக்கறை, அரவணைப்பு,
அதுவே உன் உறவின் அதி சிறப்பு!
அற்புத வாசகமாம்-வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே,
அடியேனிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருகின்றேன்'-
அடியொற்றி, அந்தஸ்து பார்க்காமல் எவரானாலும்,
அர்த்தராத்திரியானாலும், உன் வரவேற்பும், உன் பண்பும்,
அடிமனதை அடித்து நொருக்கதையா! ஆங்கு நீ,
அவஸ்தையுடன், அவதியுற்று வேதனை அனுபவித்தபோது,
அங்கு வந்து பக்கத்திலிருந்து பணிவிடை செய்யவும்,
அதற்கான கைமாறாக பரிகாரம் காணவும், முடியாத,
அப்பாவிகளாக ஆகிவிட்டோமே என்பதே எமது பரிதவிப்பு!

கல்லாற்றுக்கு மின்னொளியை காணிக்கையாக்கியே,
கரம் பிடித்தாய் நீ மனம் வைத்த எங்கள் ராசாத்தியை!
கடைசிவரை கண்கலங்காமல் கையில் வைத்தேகாத்தாய்!
கன்னியின் (ராஜ) நேசமும், குண(த்தில்); ராஜா(வும்),
கர்த்தரின் கட்டளைக்குப் பணிந்த இல்வாழ்வில்இணைந்து
கண்படும் தம்பதிகளாய், ஜோடிப் புறாககளாய்;, உறவினர்
கண்குளிர இல்லம் வந்து இன்ப அதிர்ச்சி தருவீர்!
கண்களை குளமாக்கி இன்று பேரதிர்ச்சி தந்ததேனோ?

இருவரும் உழைக்கும் குடும்பத்தின் இலக்கணமாய்,
இப்படியல்லோ வாழவேண்டும் என்பதற்கு சான்றாக,
இன்பதுன்பம் எதுவென்றாலும் சமமாக எதிர்கொண்டு,
இல்லாளை இதயத்தில் சரிபாதியாக ஏற்று நடந்தவன் நீ!
இலங்கையிலும் சரி அவுஸ்திரெலியாவிலும் சரி,
இறுமாப்பின்றி இன்னலோ இம்சையோ படுத்தாமல்,
இயங்கிய ஒரே உயர் உன்னத உத்தியோகத்தராக,
இன முரணை;பாடுகள் கோலோச்சிய காலத்திலும்,
இனக் குரோத்திற்கு இரையாகாமல் மூவினத்தினதும்,
இன்றியமையாத பொக்கிஷமாக போற்றப்படடவன் நீ!

தட்டினால் நீயே தாமதமின்றி வந்து திறப்பாய் கதவு!
தட்டுங்கள் திறக்கப்படும் தத்துவ உருவாய் நிற்பாய்!
தகுந்த உபசரணையால் அன்னையாய் தெரிவாய்! தயாரித்து நீ தரும் ரீயின் சுவை இன்றும் இனிக்குதையா!
தரிசனம் தரும் சினமறியா உன் - சிரித்த முகம்,
தவறியேனும் எம் மனத்திரையில் இருந்து விலகிடுமோ?


தவக்காலமோ வெறும் 40 நாட்கள் மட்டும்தான்!
தவிப்பில் எம்மை முற்றாக அ10ழ்த்தி, ஆகாரமின்றியே,
தத்தளித்தாய் நீயும் 45 நாட்களுக்கு மேல்,
தன்னடி சேர்க்கவே கர்த்தர் தந்தாரோ வரம்!
தந்தையான அவரின் இறக்கைக்குள் அடைக்கலமானாய்!
தடுமாற்றத்திலும் ஒரு தத்தவமாய் நிற்கிறாய் நீ!
தடையேதுமின்றி கத்தருள் நிச்சயம்; நீ என்பதால்,
தருகின்றாய் ஆறுதல்! நித்திய வாழ்வு நிலைக்கட்டும்.!

துயரில் பங்கேற்கும்,
கே.ரவீந்திரன் (ரவிப்ரியா) குடும்பத்தினர்;
A.V.K.Task photo
Periyakallar 2
Batticaloa
Srilanka.

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka