Saturday, November 19, 2016

31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்- அமரர் இராசமுத்து துரையப்பா

அமரர்  இராசமுத்து துரையப்பா

அன்னை மடியில் - 27.03.1932            ஆண்டவன் பாதங்களில் -22.10.2016


அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள Concord வைத்தியமனையில் 22.10.2016 இல் எங்கள் குடும்ப ஒளிவிளக்கு இயற்கை எய்திய செய்தி அறிந்தவுடன் அங்கு வந்து புனிதவுடலைத் தரிசித்த மற்றும்  களுவாஞ்சிகுடியிலுள்ள எமது இல்லத்திற்கு சமுகமளித்து துன்பியல் பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் அன்புள்ளங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் அவுஸ்திரேலியாவில் Guardian Funerals Chapel  மலர்ச்சாலைக்கு வந்து இறுதி அஞ்சலி செய்தவர்கள், இறுதிக்கிரியையிலும் தகனஞ் செய்த வேளையிலும் பிரசன்னமாகியிருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகின்றோம். மேலும் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் மூலம் துயர் பகிர்ந்தவர்கள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு அனுதாபங்கள் தெரிவித்தவர்கள், பதாதைகள் காட்சிப்படுத்தியோர், மலர் வளையங்கள் சாத்தி கௌரவித்தவர்கள் மற்றும் பல வழிகளில் தோளோடு தோள் நின்று இரவு பகலாக ஒத்துழைப்பு வழங்கியோர்களுக்கும் உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அன்னாரது 31 ஆம் நாள் அந்தியேட்டி ஆத்ம சாந்தி பிரார்த்தனை 21.11.2016 திங்கட்கிழமை களுவாஞ்சிகுடியிலுள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெறும். இந்நிகழ்வில் கலந்து கொள்வதுடன் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் பங்கேற்குமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு :  0652251009 ,  0713912614 

இவ்வண்ணம்                                              சரஸ்வதி வித்தியாலய வீதி
குடும்பத்தினர்                                                   களுவாஞ்சிகுடி 


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka