Thursday, June 22, 2017

மரண அறிவித்தல் - திருமதி. சுந்தராம்பாள் குமாரசாமி


ஏறாவூரை பிறப்பிடமாகவும் கல்லடி வேலூரை வசிப்பிடமாகவும் கொண்ட
குமாரசாமி சுந்தரம்பாள் அவர்கள் 2017.06.21 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.

அன்னார் போரதீவைப் பிறப்பிடமாக கொண்ட மயிலப்போடி குமாரசாமி (அதிபர் - ஓய்வு நிலை) அவர்களது பாசமிகு துணைவியாரும், ஏறாவூரை சேர்ந்த அமரர்கள் இரத்தினம் - தங்கம்மா அவர்களின் பாசமிகு புத்திரியும், போரதீவைச் சேர்ந்த அமரர்கள் மயிலிப்போடி - தங்கப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகளும், அமரத்துவமடைந்த சுதாகர், சுதர்ஷினி (ஆசிரியை மட்/இந்துக்கல்லூரி), அமரத்துவமடைந்த பிரபாகர் (விரிவுரையாளர் - ஆங்கிலம் - கிழக்கு பல்கலைக்கழகம், திருமலை வளாகம்), கதாகர் (விஞ்ஞான தொழில் நுட்ப அலுவலர், விதாத வள நிலையம், பிரதேச செயலகம், காத்தான்குடி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கௌசல்யா (பிரான்ஸ்), விஷ்ணுராஜ் (ஆசிரியர், தாழங்குடா ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலம்) சுதாகரி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஹேமாதுரன் (பிரான்ஸ்), தனோஜித், பிரகித் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், அமரத்துவமடைந்த மதுராங்கன் மற்றும் மதுமிதன், நோர்ஹனி, தேநினன் ஆகியோரின் பாசத்துக்குரிய அம்மம்மாவும், மோனகுருசாமி, பேரானந்தம், தங்கரெத்தினம், மேகாநந்தம், தனலெட்சுமி, அன்னலெட்சுமி, தயானந்தன் (லண்டன்), கேதாரகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், செல்வம், மகேஸ்வரி, தனலெட்சுமி, செல்லம்மா, அமரர் தங்கையா, தேவகி, அமரர் சுந்தரலிங்கம், தவராஜா, செரின் (லண்டன்), கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் கல்லடி வேலூர் 9ம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து நல்லடக்கத்துகாக மட்/ கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு 2017-06-22 ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.30 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல் 
மயிலப்போடி குமாரசாமி (கணவர்) 
மக்கள் 
மற்றும் குடும்பத்தினர் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka