சாமித்தம்பி சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்)
கொக்கட்டிச்சோலை R.K.M பாடசாலை
பிறப்பு 31.08.1939 இறப்பு 20.09.2017
மட்டக்களப்பு ஆரையம்பதியை வசிப்பிடமாக கொண்ட அமரர் சாமித்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 20.09.2017 அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்
காலம் சென்றவர்களான சாமித்தம்பி சின்னப்பிளை ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்ற மார்க்கண்டு (இலங்கை மின்சாரசபை), திருமதி தங்கமணி கனகரெத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) , ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற கனகரெட்ணம் (ஓய்வுபெற்ற அதிபர்) ,சிவமணி ஆகியோரின் மைத்துனரும் , திருமதி யோ.நிரஞ்சனி ,சாரங்கன் (பிரான்ஸ்) ஆகியாரின் பாசமிகு மாமாவும், திருமதி ப.யசோதராதேவி (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) , கிருசாந்தன் (இலங்கைவங்கி, திருகோணமலை) ஆ.யோகராஜா(சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை ) திருமதி ச.நந்தீதா (அபிவிருத்தி உத்தியோகத்தர்,உளவளத்துறை) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரையம்பதி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்
கனகரெத்தினம் வீதி
ஆரையம்பதி -01