அன்னை மடியில் 12.07.1993 இறைவனடியில் 12.01.2017
பரமானந்தம் சாமினி (சம்மி)
ஆண்டொன்று ஆனதுவோ
என் ஆசை நிலா பிரிந்து சென்று
ஆறாய்ப்பெருகுதடி கண்ணீர்
உன் மறைவதனை ஏற்க மறுத்து
காவலன் கொண்டு சென்றான் - டெங்குக்
காய்ச்சல் என்று சொல்லியுனை
கல் மனங்கூடக் கரைந்ததடி
நீ காலமான செய்தி கேட்டு
கடவுளிடம் சண்டை போட்டோம்
கடைசிவரை உனை காக்கவில்லை யெனச் சொல்லி
காலங்கள் கூட ஆற்றாதடி
எம் மனதில் பட்ட காயந்தனை
அழகு ஓவியம் நீயே
அழியாக் காவியம் நீயே
அன்புத் தெய்வமும் நீயே
என்றும் எம் மனங்களிலே
பிரிவென்ற சொல்லினது
அர்த்தம் அதனையே மாற்றுவோம்
சாகும் வரை உன் நினைவுதனை
எம் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு
அக்கா சார்னிதா (ஜனா) குடும்பத்தினர்
பெற்றோர், சகோதரர்கள், மற்றும்
உற்றார், உறவினர்கள்
கணக்கப்பிள்ளை வீதி, நாவற்குடா
மட்டக்களப்பு
0652245025