Thursday, December 20, 2018

அமரர். திருமதி. நேசம்மா சாமித்தம்பி : 31ம் நாள் நினைவஞ்சலியும் , நன்றி நவிலலும்

31ம் நாள் நினைவஞ்சலி 25.12.2018 செவ்வாய்க்கிழமை ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், நன்றி நவிலலும்


குறுமன்வெளியை பிறப்பிடமாகவும், பலாச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து கடந்த 25.11.2018 ஞாயிறு அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தெய்வத்தின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையமூடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம், துண்டுப்பிரசுரம், பதாதைகள் ஊடாக அனுதாப அலைகளைத் தெரிவித்தவர்களுக்கும், நேரில் கலந்து கொண்டு அனைத்து வழிகளிலும் உதவி நல்கிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.

அன்னாரின் சிவப்பதப்பேறு குறித்த 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு பலாச்சோலை, காக்காச்சிவட்டை, மண்டூர் எனும் முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

இங்ஙனம்:   குடும்பத்தினர்
     பலாச்சோலை
     காக்காச்சிவட்டை
         மண்டூர்.

தொடர்புகளுக்கு: 076 9212641, 077 6983550, 0044 7405685809, 077 7895403 


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka