Friday, December 7, 2018

மரண அறிவித்தல் : சண்முகநாதன் கஜேந்திரன்


பிறப்பு: 09.06.1985                      இறப்பு: 07.12.2018

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், சண்முகநாதன் - அன்னலெட்சுமி தம்பதிகளின்  புத்திரரும்,

காலஞ்சென்ற ரசாரத்தினம்-ராசமணி மற்றும்  சிவக்கொழுந்து-தங்கச்சியம்மா அவர்களின் அன்புப் பேரனும்,

ஜெயராஜ், குமுதினி, வினோதினி, சுபாஜினி, அரவிந்தன், அசோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெகதீஸ்வரன்,விக்னேஷ்குமாரன்,உதயகுமார், தர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் வரணஜா, ஹேமலக்ஷ்மன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் சுபிக்ஷா, சந்தீஸ், அபிஷா, சாயி வர்ஷா, சானுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 24/12/2018 திங்கட்கிழமை செங்கலடியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை  3.00 மணிக்கு
செங்கலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நாவற்கேணி ஏறாவூர் -04 செங்கலடி

தொடர்பு இலக்கம் - 0094652241050

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka