Tuesday, June 4, 2019

அமரர். திரு.ஆறுமுகம் சுந்தரலிங்கம் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


மட்/கல்லடி உப்போடை விபுலானந்த வீதியை சேர்ந்த அமரர். திரு.ஆறுமுகம் சுந்தரலிங்கம் (கல்லடி உப்போடை ஸ்ரீ முத்தி விநாயகர் ஆலய முன்னாள் தலைவர் )  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ஈர விழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புகள் இல்லாத தோனிகள் போல்
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்

உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்கயார் கன்பட்டதுவோ , என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர்கள்
என் தெய்வமே

அப்பா என்ற மூன்றெழுத்துக்குள்
அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தி விட்டு
மூன்றுலகம் கடந்து போய் விட்டீர்கள் !

அன்று உங்கள் அன்பு மழையில்  நனைந்தோம்
இன்று கண்ணீர் மழையில்  நனைகிறோம் !

நிஜமாய் கண்ட உங்களை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் விம்முகிறது....

உங்களிடத்தை  நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உங்களுக்கிணையாய் யாருமில்லை

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளி கூட அழியாது உங்கள் நினைவு ..
அளவற்ற உங்கள் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம் ....



என்றும் உங்கள் நினைவுகளுடன்
அன்பு மனைவி பிறேமளா
ஆசை மகன் மனுஷ்மிருதன்
பெறாமக்கள் , பிறின்சிற்றா , ஹரிமீனுஜன்
மற்றும் குடும்பத்தினர்
உற்றார் உறவினர்கள்

இல.16/54  விபுலானந்த வீதி
கல்லடி , உப்போடை
மட்டக்களப்பு

0777147370
0755801121

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka