Sunday, July 28, 2019

31ம் நாள் நினைவஞ்சலி : அமரர் திருமதி கனகேஸ்வரி திருநாவுக்கரசு

31ம் நாள் நினைவுக் கிரியை அழைப்பிதழ்

அன்புடையீர்!

காலம் - 01.08.2019 வியாழக்கிழமை

இடம் - நாவலர் வீதி குருக்கள்மடம்.

அன்னாரின் ஆத்ம சாந்திக் கிரியைகளில்; கலந்துகொண்டு; அன்னாரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திக்குமாறும்; அதனைத்தொடர்ந்து எங்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்திலும் பங்கேற்குமாறும், உச்ச அன்பு மேலிட உங்களைஉரிமையோடு அழைக்கின்றோம்.

இவ்வேளையில், எங்கள் ஆருயிர் தோன்றலரின் துயரச் செய்தி கேட்டு இற்றைவரை எமக்கு பக்க துணையாக நின்றுபலவிதமாகவும் எமது துயரில் பங்கேற்று. பதாதைகள். இரங்கலுரை, அனுதாபச் செய்திகள் அடங்கலாக அனைத்துவிடயங்களிலும் அளப்பரிய உதவிகளைச் செய்து எமது துயரைப் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எமது குடும்பம்சார்ந்த உளமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.



குலமணிப்பேழையாக வரலாற்றில் நிலைத்து நின்றவள் நீ!

குங்குமம் காத்து குருக்கள் மடத்தின் குலவிளக்கானாய் நீ!

குடியிருந்த வீட்டில் தெய்வகடாட்சம் காட்டியவள் நீ!

குதுகலமாக மாமி என்று அழைத்து அணைத்து மகிழ,

குறைவிலா மருமக்களை சொந்தங்களாக பெற்றவள் நீ!



குறைகள் சொல்லாமல் எனக்கென்றே வாழ்ந்து காட்டியவள் நீ!

குன்றின் விளக்காக என்ளை சமூகத்தில் ஏற்றி வைத்தவள் நீ!

குனிந்த தலை நிமிராத தமிழ் பண்பாட்டின் புத்தகம் நீ! –என்

குறிப்பறிந்து என்னை சேய்போல் பராமரித்த தங்க தாய் நீ!



குந்தகம் யாருக்கும் செய்யாமல் அறநெறியில் சங்கமித்தவள் நீ!

கும்பிடும் தெய்வங்களுக்கு பணி செய்ய ஊக்;குவித்தவள் நீ!

குறுக்கேநிற்காமல் எனது அரசியல்புலத்தையும் ஆதரித்தவள் நீ;!
குற்றுயிராய் நின்று நான் புலம்ப உயிரே எங்கேபுறப்பட்டாய்?



தகவல்-

கணவர் கலாபூஷணம் மா.திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர்
நாவலர் வீதி
குருக்கள்மடம்.

0652250292

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka