Wednesday, April 15, 2020

31ம் நாள் நினைவஞ்சலி : அமரர் குஞ்சித்தம்பி சிவஞானம்


விழியோர வலிகள் 

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான்"



குலத்தின் குலவிளக்காய் நின்று
குருவாய் வழிகாட்டி ...
குற்றங்குறைகளை சுட்டிக்காட்டி
குடும்பத்தை வடிவமைத்த சிற்பியே 

இறை வழிபாடே இன்பமெனக்கொண்டு 
பக்திநெறி மாறாத பக்திமானாக 
குமார கடவுளின் ஆசி பெற்ற மாமனிதராய் 
தன்னை தேடி வருவோரை ஆதரிக்கும் ஆசானாய் 
விளங்கியவர் நீ 

எங்கள் அன்புத்தெய்வம் எங்களை விட்டு 
உதிர்ந்து சென்ற நாளை எண்ணி வருந்தி அஞ்சலி 
செலுத்துகின்றோம் 
உங்களால் செதுக்கப்பட்ட சிற்பங்களாகிய நாங்கள் 
என்றும் உங்கள் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திக்கிறோம் 

முகவரி - பாடசாலை வீதி, கிரான்.
தகவல் - குடும்பத்தினர் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka