ஈரவிழியோடு ஈராண்டு சென்றாலும்
உங்கள் நினைவு மறக்கவில்லை - அப்பா
உங்கள் இடத்தை நிரப்பவோ யாருமில்லை - அப்பா
எங்களுக்கு இருள் என்றாலே - பயம்
ஆனால் இப்போது நீங்கள் எங்களுடன்
பின் தொடர்கிறீர்கள் எனும் துணிவுடன் - இருளினிலே
தனியாக செல்ல துணிந்து விட்டோம்
எண்ணிக்கையில் ஒன்றை இழந்தோம்
என்றால் மிகவும் சிறிதே
எங்கள் குடும்பத்தில் - உங்களை
இழந்ததே மிகப்பெரிய இழப்பே - அப்பா
உங்களை போன்ற பலரை
காணும் போதெல்லாம் நீங்கள் தான் - என
நினைத்து எங்கள் மனதை
தேற்றிக்கொள்வோம் அப்பா
இவை வெறும் வார்த்தைகள் அல்ல
எங்கள் மனதிலிருக்கும் உங்களைப்
பற்றிய விம்பம் - அப்பா ஒவ்வொரு செக்கனும் - நீங்கள்
மீண்டும் வரமாட்டீர்களா ? என
தவிக்கின்றோம் - அப்பா
என்றும் உங்கள் நினைவுகளுடன்,
ஆசை மகன் சுந்தரலிங்கம் மனுஷ்மிருதன்
அன்பு மனைவி திருமதி. பிரேமளா சுந்தரலிங்கம்
பெறா மக்கள் பிரின்சிட்டா, ஹரிமீனுஜன்
மற்றும் உற்றார் உறவினர்கள்
16/53 விபுலானந்தா வீதி,
கல்லடி உப்போடை,
மட்டக்களப்பு,
0755801121