Thursday, May 14, 2020

ஈராண்டு நினைவஞ்சலி: அமரர். திரு. ஆறுமுகம் சுந்தரலிங்கம்


ஈரவிழியோடு ஈராண்டு சென்றாலும்

உங்கள் நினைவு மறக்கவில்லை - அப்பா

உங்கள் இடத்தை நிரப்பவோ யாருமில்லை - அப்பா




எங்களுக்கு இருள் என்றாலே - பயம்

ஆனால் இப்போது நீங்கள் எங்களுடன்

பின் தொடர்கிறீர்கள் எனும் துணிவுடன் - இருளினிலே

தனியாக செல்ல துணிந்து விட்டோம்




எண்ணிக்கையில் ஒன்றை இழந்தோம்

என்றால் மிகவும் சிறிதே

எங்கள் குடும்பத்தில் - உங்களை

இழந்ததே மிகப்பெரிய இழப்பே - அப்பா




உங்களை போன்ற பலரை

காணும் போதெல்லாம் நீங்கள் தான் - என

நினைத்து எங்கள் மனதை

தேற்றிக்கொள்வோம் அப்பா




இவை வெறும் வார்த்தைகள் அல்ல

எங்கள் மனதிலிருக்கும் உங்களைப்

பற்றிய விம்பம் - அப்பா ஒவ்வொரு செக்கனும் - நீங்கள்

மீண்டும் வரமாட்டீர்களா ? என

தவிக்கின்றோம் - அப்பா




என்றும் உங்கள் நினைவுகளுடன்,

ஆசை மகன் சுந்தரலிங்கம் மனுஷ்மிருதன்

அன்பு மனைவி திருமதி. பிரேமளா சுந்தரலிங்கம்

பெறா மக்கள் பிரின்சிட்டா, ஹரிமீனுஜன்

மற்றும் உற்றார் உறவினர்கள்




16/53 விபுலானந்தா வீதி,

கல்லடி உப்போடை,

மட்டக்களப்பு,

0755801121

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka