பெரிய போரதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மயிலிப்போடி மகேஸ்வரி (இளைப்பாறிய ஆசிரியை) 27/08/2021 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார் .
இவர் காலஞ்சென்ற தங்கப்பிள்ளை-மயிலிப்போடி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திருமதி.சீனிவாசகம் முருகேசு அவர்களின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற பண்டிதர் ப.முருகேசு அவர்களின் மைத்துனியும், திருமதி.அருந்தவமலர் சர்வேஸ்வரன் அவர்களின் அன்பு சிறிய தாயும், திரு.ப.சர்வேஸ்வரன் அவர்களின் சிறிய மாமியும், சுபேசன், தம்மியா அவர்களின் பாட்டியுமாவார்.
31 ஆம் நாள் நினைவஞ்சலி கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் தற்கால கட்டுப்பாட்டு சூழ்நிலைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு
இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
-குடும்பத்தினர் -