Thursday, November 10, 2022

மரண அறிவித்தல் : அமரர் கந்தையா றோகினி.

வந்தாறுமூலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு 120/7 மத்திய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார் காலஞ்சென்ற கந்தையா, திருமதி சந்தனப்பிள்ளை கந்தையா ஆகியோரின் செல்வப்புதல்வியும் , ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் கனக நாயகம் , ஓய்வு பெற்ற இ.பொ.ச சாரதி கணேசமூர்த்தி , திருமதி சரஸ்வதி சோமலிங்கம் , திருமதி கருணையம்மா சண்முகம் , காலஞ்சென்ற தேவகி ஜோஜ்ஸீரான்லி (ஆசிரியை) , ஓய்வுபெற்ற கணக்காய்வு உத்தியோகத்தர் திருமதி ஜானகிதேவி பிரேம்குமார் , மட்/போதனா வைத்தியசாலை தாதிய பரிபாலகர் சிவப்பிரகாசம் ஆகியோரது அன்புச் சகோதரியும் , காலஞ்சென்ற அழகம்மா , பொன்மணி , காலஞ்சென்ற கவிஞர் சோமலிங்கம் சண்முகம் , காலஞ்சென்ற ஜோஜ்ஸீரான்லி (தொழிநுட்ப உத்தியோகத்தர் நீர்பாசனத்திணைக்களம்) , காலஞ்சென்ற பிரேம்குமார் , கயல்விழி (சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் - பிரதேசசெயலகம் - மண்முனை வடக்கு) ஆகியோரது மைத்துனியும் , அன்னரால் வளர்க்கப்பட்ட டிஹர்ஷ்னா , கோஷிஹன் ஆகியோரது பாசமிகு அம்மம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.11.2022 அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4.00 அளவில் நல்லடக்கத்திற்காக மட்/ ஆலையடிச்சோலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


தகவல்

குடும்பத்தினர் .

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka