ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அகலுமா நெஞ்சை விட்டு உங்கள் நினைவுகள் அப்புச்சி . நாம் செய்த தவங்கள் பயனற்று போனதேனோ .
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே கூடியிருந்த எம்மை எல்லாம் கைவிட்டு சென்றதேனோ அப்புச்சி எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு விட்டு நிம்மதியாக இறைபாதம் சென்றது ஏனோ அப்புச்சி
அன்பினால் பண்பினால் எங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் அப்புச்சி வருடங்கள் மாதங்கள் , நாட்கள் செல்ல செல்ல உங்களுடன் கழித்த நாளிது , உங்கள் அருகில் அமர்ந்த நிமிடம் இது என நினைத்து நினைத்து வாடுகின்றோம் . எங்கள் அன்பு அப்புச்சிக்கு எமது கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி என்றென்றும் உங்கள் நினைவுகளுடன் பரிதவிக்கும் மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள் தகவல் - குடும்பத்தினர்
0 comments:
Post a Comment