எங்களின் உயிர் உள்ளவரை அழுது கண்ணீர் சிந்துவதும், மூன்று தெய்வங்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நினைத்து வேதனையடைந்து வெதும்புவதும், எம் கண்முன்னே கனவிலும் நினைவிலும் அவர்களின் பிம்பங்கள் தோன்றி மறையும் போதெல்லாம் தாங்க முடியாத வேதனை அடைவதும்தான் எம் எல்லோரினதும் விதியாகும். எனினும் 18 மாத காலத்திற்குள் ஒரே குடும்பத்தில் மூன்று உயிர்களை இழப்பது என்பதின் தாற்பரியம் அக் குடும்பத்தாருக்கே மட்டும் விளங்கும் மற்றவர்களுக்கு இது ஒரு செய்தி மட்டுமே.
மூவரினதும் ஆத்மாக்கள் சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.